Monday, December 29, 2008

வருக 2009

எழுந்த பெட்ரோல் விலை குறையட்டும்
வீழ்ந்த பொருளாதாரம் எழுகட்டும் !

பங்கு சந்தைகள் ஏறட்டும்
பணவீக்கம் தணியட்டும் !

நித்தம் ஒரு குண்டு என்ற
நிலைமை மாறட்டும் !
நிம்மதியாய் மக்கள்
பெரும் மூச்சு விடட்டும் !

போருக்கு அஞ்சும் அரசியவாதிகளை
வரும் ஆண்டு மாற்றட்டும் !
மரணம் என்பது பொதுவென்று
எதிரிக்கு நம் படை காட்டட்டும் !

இடிந்த போன தமிழீழம்
இனி மேலாவது வாழட்டும் !
இலங்கையின் அரசியலுக்கு
இயற்கை பதில் சொல்லட்டும் !

ஈழத்தை பற்றி பேசும் போது
காதை கூர்மையாய்
தண்ணீர் பற்றி பேசும் போது
மந்தமாய் கேட்கும் காதுகள்
தெளிவாய் கேட்கட்டும் !

மரங்களாக வாழ்ந்த தமிழர்கள்
புத்தாண்டில் மனிதனாக வாழட்டும் !

('கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீட்டு விழாவில் சொன்ன கவிதை )

1 comment:

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

Free Web Counters
வந்தவர்கள்