Wednesday, December 17, 2008

ஞாபகங்கள்

பள்ளி பருவத்தில் பிரிந்த தோழனை
நடு சாலையில் அழுது வாங்கிய பொம்மை
விளையாட்டில் நண்பனிடம் போட்ட சண்டை
தந்தை கரம் பிடித்து நடந்த நடை
நினைத்தால் நரம்புகளும்
நவரச கீதம் பாடும் ஞாபகங்கள் !

பகைமை தூண்டிவிடம் நினைவுகள்
காமத்திற்காக காதலிக்கும் காதலர்கள்
கருணை மறந்த கள்வர்கள்
கர்மத்தை செய்து காலத்தை ஓட்டுபவர்கள்
நினைத்தால்
நித்திரை கெடுக்கும் ஞாபகங்கள் !

மறதியை பரிசளித்த இறைவனே
தேவையில்லாவற்றை அழித்து விட்டு
தேவையானவற்றை நினைவுப் படுத்த....
கணிப்பொறிப் போல்
மனதை படைத்தால் என்ன ?

தேவையில்லாத ஞாபகங்களின்
உன் ஞாபகத்தை மறந்தேன் !
பல மதக்குழப்பத்தில்
நீயும் என் ஞாபகத்தை மறந்தாய் !

மறதிலும் இறைவன்
ஞாபகமாய் சொன்னான் -

“மறதி மனிதனுக்கு மட்டுமல்ல
மகேஸ்வரனுக்கும் பொதுவென்று”

No comments:

Free Web Counters
வந்தவர்கள்