Monday, March 24, 2008

தேவதை தோழி

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.

நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் ‘நட்பு’ என்று சொல்லிய வார்த்தை ‘காதல்’ என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.

சிக்னல் தேவதை

நில நிற மேகம் வாகனத்தில் என்னை கடந்து சென்றதை பார்த்தேன். ஆண்களை விட பெண்கள் வேகமான வாகனங்கள் ஓட்டுவார்கள் என்று உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உன் வலையல்களை கூட நீ இப்படித்தான் வளைப்பாயா என்று கேட்கும் அளவிற்கு உன் வாகனத்தை அப்படி வளைத்து செல்கிறாய். எனக்கு பழைய வண்டி வாங்கி தந்த தந்தையை திட்டிக் கொண்டு இருந்தேன். என்னால் உன்னை முந்தி உன் முகம் பார்க்க முடியவில்லை என்பதற்காக....

பெண்களை தொடர்வது இழுக்கு என்று சொன்னவன் நான்.... உன்னை தொடர்வதில் தவறில்லை... காரணம் நீ பெண்ணல்ல தேவதை. பலர் இங்கு காமத்திற்காகவே பெண்ணை பின் தொடர்ந்து செல்கிறார்கள். நான் தேவதை உன் தரிசனம் கிடைப்பதற்காக பின் தொடர்கின்றேன். உனக்காவே SCOOTY நிறுவனம் வடிவம் ஆமைத்தார்களோ என்ற சந்தேகம். அந்த வாகனம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அதன் வேகமும் அதிகமாகவே இருந்தது. நான் எங்கு செல்ல வேண்டும் என்ற இடத்தை கூட மறந்து விட்டேன். என் பின்னால் வா என்று உன் SCOOTY சொல்வது போல் உணர்வு. நான் நீ போகும் இடத்தை எல்லாம் தொடர்ந்தேன். ஆனால், நீண்ட நேரம்...... உன் பின் அழகை மட்டும் ரசிப்பது என்ற எண்ணம். உன் முகத்தை பார்க்க முடியாதா எனற் ஏக்கத்துடன் வேகமாக உன்னை தொடர்ந்தேன்.

நல்ல வேலை நம் ஊரில் ஒவ்வொரு சாலையிலும் நான்கு சிக்னல்கள் இருந்தன. பல முறை அவசரத்தில் செல்லும் போது இந்த சிக்னல்களை திட்டியிருப்பேன். ஆனால், இன்று தான் இந்த சிக்னல் நல்ல வேலை செய்ய தொடங்கியது. சிக்னலுக்காக நீ வண்டியை நிருத்த நானும் உன் அருகில் வண்டியை நிருத்தி பார்த்தேன்.... உன் முகத்தை. உன் அழகை என்ன வென்று சொல்வது. உன்னை வர்ணிக்க உயிருடன் இருக்கும் கவிஞர்கள் போதாது. இறந்த கவிஞர்களும் போதாது. இன்னும் கடவுள் பல கவிஞர்களை படைக்க வேண்டும்.....உன் அழகை பற்றி எழுதுவதற்காக....

என் மனதில் ஒரு குரல்.... அட மடையா... கவிஞர்களை உருவாக்கத் தான் கடவுள் இவளை படைத்தான்... உனக்கு புரியவில்லையா என்றது. அவளை பார்த்த சில நோடியில் நான் கூட கவிஞனாகிவிட்டேன் என்று அப்பொது தான் நானும் உணர்ந்தேன்.

நம் அரசாங்கம் ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் வைத்து இருக்கிறார்களே ..... பின்பு எதற்கு உன் நெற்றியிலும் இத்தனை சிக்னல். சற்று உற்று பாருடா என்று என் மனது சொன்னது.... அது சிக்னல் அல்ல அவள் நெற்றியில் இருக்கும் குங்குமம், சந்தனம், விபூதி.... என்று பார்த்தேன். சிக்னலின் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் பிறந்தது அவளின் நெற்றியை பார்த்து தான் வந்தது போலும் என்று எனக்கு தோன்றியது.

அவள் அழகை ரசிக்கும் வேளையில்..... எதிரே விழுந்த பச்சை நிற சிக்னலை கவனிக்க மறந்தேன். பச்சை நிறம் விழுந்தவுடன் அவள் மின்னலாக பறந்தால்..... நானும் என்னால் முடிந்த வேகத்தில் பின் தொடர்ந்தேன். என்னை விட மிக தொலைவிலே சென்று விட்டாய். எப்படியாவது அவளை பிடித்தவிட வேண்டும் என்று என் வண்டிக் கூட வேகமாக ஓட தொடங்கியது. அடுத்த சிக்னல் வந்தது. அதில் பிடித்து விடலாம் என்ற கனவுடன் இருந்தேன். பாவி , சிக்னல் அவள் கடந்த பிறகு சிவப்பு விழுந்தது. மேலும் அவளை பின் தொடர முடியாமல் போனது. சற்று முன் தான் சிக்னலை பாராட்டினேன். அவள் நெற்றியில் இருக்கும் ஆன்மிக சின்னத்தை கூட சிக்னலுக்கு உவமையாக்கினேன். ஆனால், அந்த நன்றி மறந்த சிக்னல் என்னை ஏமாற்றி விட்டது. ஏமாற்றத்துடன் வந்த வழியே சென்றேன். மீண்டும் வழிக்காட்ட அந்த தேவதையில்லை. ஆனால், அவள் நெற்றியின் நினைவாக ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் இருக்கிறது.

Test tube தேவதை

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry labs.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள்.

Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அ வ ளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக் கொள்வான்.

வேறு தேசத்தவன் கூட அவளுக்காக தமிழ் கற்ற வேண்டும் என்று சொல்லும் போது ..... தமிழ் தெரிந்த நான் சும்மாவா இருக்க முடியும்.... என் தோழர்கள் படையுகளுடன், test tube ஏந்திய தேவதையிடம் சென்றேன்.

Chemistry lab முழுக்க திரவம் நாற்றம்..... அங்கு நுழைந்ததற்காக என்னை தூற்றிய நண்பர்கள்.... நான் மட்டும் அந்த தேவதை குரல் கேட்கும் ஆவலில் கால்கள் நடந்தது. நண்பர்களில் வார்த்தைகளை கேட்க காதுகள் மறுத்தது.....

அவள் இருக்கும் இடத்தை அடைந்தேன். அங்கு மட்டும் மல்லிகை வாசம் தூக்கி வாரிப்பொட்டது. அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ஒவ்வொரு bottle லும் ஒவ்வொரு திரவங்கள்..... sulphuric acid, hydrolic acid. Sodium chloride என்று திரவங்களின் பெயர்களை சொல்லி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டு இருந்தாள். திரவங்களின் பெயர் எனக்கு எதற்கு..... அந்த தேவதை பெயர் தெரிந்துக் கொள்ள தானே காத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை பெயர்களை சொன்னவள் அவள் பெயரை சொல்லவில்லை.
நண்பர்கள் என்று எண்ணி என் எதிரிகளை தான் அழைத்து சென்று இருக்கிறேன். அந்த தேவதை ரசிக்க விடாமல் அந்த இடத்தை விட்டு செல்ல உத்தரவிட்டார்கள். நான் மறுத்தும் என்னை இழுத்து சென்றார்கள். மனதில் நண்பர்களை திட்டிக் கொண்டு அந்த தேவதை இருக்கும் இடத்தை விட்டு சென்றேன்.

மறு நாள் அதே கல்லூரி பொருட்காட்சி..... மீண்டும் அந்த தேவதை சந்திக்க என் முழு எண்ணமாக இருந்தது. உடன் எந்த நண்பர்களையும் அழைத்து செல்லவில்லை. அவள் இருக்கும் Chemistry lab க்கு மனம் விரைந்து ஓடியது. அந்த தேவதை இருந்த இடத்தில் வேறொரு கோதை நின்றுக் கொண்டு இருந்தாள். எத்தனை கோதை அங்கு நின்றாலும் அந்த தேவதை போல் வருமா..... திரவத்துக்கு கூட வாசம் தரும் அவள் ஸ்பரிசம் கிடைக்குமா ? .... என்று மனதில் ஏக்கங்கள் மட்டுமே நிறம்பியது. கண்களில் வெருமை தெரிந்தது.

Test tube குழந்தையை கண்டு பிடித்தவன். cloning முறையில் அவளின் இன்னொரு உருவை செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. வானத்தில் ஒரு நிலவுக்கு தான் மதிப்புண்டு.... செயற்கை கோளுக்கு என்ன மதிப்பு ... தகவல் தருவதை தவிர செயற்கைகோளால் என்ன பயன்....? நிலவு மட்டுமே எல்லோராலும் ரசிக்க முடியும். இந்த பூமி ரசிக்க அந்த ஒரு தேவதை போதும்..... அவளை cloning முறையில் இன்னொரு உருவை உருவாக்கினாலும் அது செயற்கை தனமாக தான் இருக்கும்.... நிலவு பூமி கண்ணுக்கு தெரியாமலா போகும்.... அந்த தேவதை என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் அந்த தேவதை நடந்த சுவடுகளை தேடி மனம் போனப் போக்கில் செல்கின்றேன்.
Free Web Counters
வந்தவர்கள்