Friday, December 12, 2008

மனித உரிமை

மனிதனுக்கு ஓட்டுப்போட உரிமை உண்டு
தேர்ந்து எடுத்த தலைவரை
நீக்க உரிமை இல்லை !

தவறு செய்ய உரிமை உண்டு
தட்டிக் கேட்பவரை வெட்டுப்படுவதால்
நியாயம் கேட்க உரிமை இல்லை !

பிள்ளைகளைக் கருவில் சுமக்க உரிமை உண்டு
லட்சங்கள் இல்லாமல்
கல்லுரியில் சேர உரிமை இல்லை !

மேல்நிலைப் பள்ளி வரை
படிக்க உரிமை உண்டு
ஜாதி இல்லாமல் பள்ளியில்
சேர்க்க உரிமை இல்லை !

போர் நடக்கும் போது
மனித உரிமைகள் பறிக்கப்படும்
-அது இந்திய அரசியல் சட்டம் !

போர் நடக்காத போது
மனித உரிமைக்ள் மீற்ப்படும்
-இது துரோகிகளின் திட்டம் !

மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை
மனித உரிமைகள் மீறப்படுகின்றன !!

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" கவிதை நூலின் 9வது கவிதை

No comments:

Free Web Counters
வந்தவர்கள்