Thursday, December 11, 2008

வாழ்க ! வாழ்க ! பாரதி வாழ்கவே !!

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதி பிறந்த தமிழ் நாடு !
சிந்தனை பிறந்தது எந்நாளாம்
சிந்து பாடும் பாரதி பிறந்த நாளாம் !

தன் திம்தரிகிட பாட்டால்
தமிழனை தட்டி எழுப்பினார் !
தன்னலம் பாராமல் எழுதியதால்
தருமி போலவே வாழ்ந்தார் !

வறுமை, அலச்சல்
ஒரு கவிஞனை உருவாக்கும் சமையல் !
இதை உணர்த்திய
பாரதி ஒரு கவிச் செம்மல் !

அச்சத்தை தவிர்க்க வைத்தாய் !
மானத்தை போற்ற வைத்தாய் !
ரௌத்திரத்தை பழக செய்தாய் !
கவிஞன் பணத்தை திரட்ட
சொல்லி தர மறந்துவிட்டாய் !!

ஆதலால்,
" நான் கவிஞன்
எனக்கு தொழில் கவிதை "
என்று சொல்லும் துணிச்சல் எனக்கில்லை !
எழுத்தும், வறுமையும் ஒன்றாய் ஏற்று
புகழ் கண்ட பாரதி
உன்னை போல் யாருமில்லை !!

வாழ்க பாரதி
வாழ்க பாரதம் !!

( விக்கிரமன், அதீனன், ம.நடராஜன் தலைமையில் பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா (11.12.2008) அன்று, எட்டையப்புரத்தில் நடந்தது. அங்கு, 'பாரதி மணி' மண்டபத்தில் நான் சொன்ன கவிதை.)

No comments:

Free Web Counters
வந்தவர்கள்