Thursday, April 17, 2008

கணினி தேவதை

தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.

கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.

ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....

பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.
நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.

வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...
இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும். Sherlock நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.

உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.

மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!
பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...

246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...

கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

Tuesday, April 08, 2008

இயற்கை தேவதை

இயற்கைக்கு பிறகு பச்சை நிற ஆடையில் நீ மட்டும் தான் தேவதையாய் தெரிந்தாய். இயற்கைக்கு சற்று போட்டியாய் உன்னை படைத்து விட்டானோ இறைவன் என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு பச்சை நிற ஆடையில் இன்னொரு இயற்கை அன்னையாய் தெரிந்தாய் நீ.....

"எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் !" என்று நீ சொல்லி இனிப்பை நீட்டினாய்.

நானும் பல முறை சுவைத்துப் பார்த்தேன். எனக்கு மட்டும் இந்த இனிப்பு தெவிட்டவில்லை. காரணம் உன்னிடம் கேட்டதற்கு "நீ சுவைத்தது இனிப்பை யல்ல...என் இதழ்கள்" என்றாய்.
இந்த இனிப்பை எந்த கடையிலும் விற்பதில்லை. ஒரு விதத்தில் நல்லது தான். இந்த இனிப்பு நான் மட்டும் சொந்தக்காரன் என்ற கர்வம் வந்தது.

"முத்தம் கொடுத்தது போதும்... நான் கொண்டு வந்த இனிப்பையும் சுவைத்த பார் !" என்றாய்.

உன் இதழ்களை விட்டு உன் கன்னத்தை சுவைக்க தொடங்கியது என் இதழ்கள். எத்தனை முறை முத்தம் கொடுப்பாய் உனக்கு அலுப்பு தட்ட வில்லையா என்று போய்யான கோபத்தில் கேட்டாய். எத்தனை முறை அலைகள் கரைக்கு வந்து கொண்டு இருக்கிறது. என்றாவது கரை அலைகளை பார்த்து இப்படி கேட்டுயிருக்குமா ?

"உனக்கு முத்தம் கொடுத்து அலுப்பு தட்டவில்லை..... உன்னிடம் ஒரு முறை எல்லை மிரலாமா என்று மனது துடிக்கிறது" என்றேன்.
"அடபாவி...கன்னத்தில் அரை வாங்குவாய்" என்றாய். அறையில் பள்ளிக் கொள்ள வா என்று அழைத்ததற்கு அடி விழும் என்றாய். அ து கூட எனக்கு சுகம் தானடி நீ என்னை தீண்டுவதால்......

"உன் பிறந்த நாளுக்கு ஒரு கவிதை சொல்லட்டுமா." என்றேன்.

"சரி....சொல்" என்றாய் வெட்கத்துடன்.

உன் பிறந்த நாள்
ஒன்றை தவிர
மற்ற 364 நாட்களும் ஏங்குதடி
வேறு எந்த தேவதையும்
மண்ணில் பிறக்காததால்.....

ஆசையில் கட்டியனைத்து முத்தம் கொடுத்தாய்.... இவ்வளவு நேரம் நான் உனக்கு கொடுத்த முத்தங்களை எல்லாம் தொற்கடித்தது போல் உன் முத்தம்.... என் கன்னத்தில் விழுந்தது. பொறாமையில் மற்ற அங்கங்கள் வாடியது......!

நான் கொடுத்த நூறு முத்தங்களும் உன் ஒரு முத்தத்தில் தோல்வியை தழுவியது. நல்ல வேலை வெட்கம் பெண்களுக்கு ஆடையாகாவிட்டால் என்னை பொன்ற ஆண்களின் நிலைமை என்னவாகும்.

நீ வெட்கத்தில் கொடுத்த ஒரு முத்தத்திற்கே இவ்வளவு சக்தி என்றால்..... நீ உன் வெட்கத்தின் எல்லையை மீறினால் நான் என்ன ஆவேன்.... பயம் களந்த ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்..... நாம் எல்லை மீறும் மண நாள் என்று வருமோ.....?

Tuesday, April 01, 2008

உணவு

கையில் சுலாயுதமாய் ஃபோர்க்
விரல்கள் நடுவில் ஸ்புன்
நேடு நேரம் கழித்து செரிக்கும் உணவு
கை கழுவ ஃப்பிங்கர் ப்பௌல் !!

இங்கே உணவின் வகைகள் நிறைவு
கொடுக்கும் அளவோ குறைவு !
பசி அடங்கியதோ கடுகளவு
வரும் பில்லோ வானளவு !!

அன்ன தானம்
தனத்திடம் மட்டும் குடியிருக்கிறாள் !
அன்னபூரணி
புரனமாய் மாறிவிட்டாள் !!

அரோக்கியமான உணவு மலிவாய் இருக்க
வியாதிகளை உணவாய் உண்ண...

கலாச்சாரத்தை மறந்த மனிதன்
உணவுக்கு கலாச்சாரம் வளர்க்கின்றான் !!

வாக்காளர் பட்டியல்

சிட்டிசன் கதையும்
எங்கள் கதையே...
வாக்காளர் பட்டியலில்
எங்கள் தெருப் பெயரே காணவில்லை

நூறு சதவீதம் ஒட்டு பதிவு
சட்டசபையில் மட்டுமே சாத்தியம் !

சட்டசபை தேர்தல் தேர்தலில்
ஒரு நாள் விடுமுறை மட்டுமே லாபம் !

இறந்தவர்கள் உயிர் பெற்ற
பல கதைலள் உண்டு

உயிர் இருந்தும் இறந்தார்
என அறிவிக்கப்பட்டவர் உண்டு !!

பல முறை தேர்வு எழுதியும்
பாஸ் ஆகாத மாணவர்கள்
- மக்கள்

படிக்காமலே பாஸாகும் மாணவன்
- வேட்பாளர்

புதிய தேகம் வேண்டும்

என் தேகம் அமைப்பை மாற்ற
தெய்வத்திடம் முறையிட்டேன்
அவனோ முறைத்தவாரே !
செவிக் கொடுத்தான்
என் குரலுக்கு.......

என் உடலில்
தேவையற்ற பாகங்கள் இரண்டு
தேவையான பாகங்கள் ஒன்று !

தேவையற்ற பாகங்கள் என்ன ? -
என்றான்
விடையளித்தேன்

ஒரு காட்சியை
காண இரு கண்கள் !
ஒரு ஒலியை
கேட்கும் இரு செவிகள் !
ஒரு வாடையை
ஸ்வாசிக்க் இரு கூலாய்கள் !
தேவையற்ற வெளியேற்றும்
இரு சிறுநீர்கள் !
இதில் ஒன்றை நீக்கிவிட்டு
நான் கேட்கும் பாகங்கள்
இரண்டை கொடு !

செரிக்க ஒரு வயிறு
செமிக்க மற்றொரு வயிறு !
ஒரு தேகத்தில்
இரண்டு இதயங்கள்
உண்மை மட்டும் பேசும்
இன்னொரு இதழ்கள்
வாகெடுக்கும் தலைக்குள்
இரண்டு அறிவு
என் உரையை முடிப்பதற்குள்
இறைவன் மறைந்தான் !

நான் கூறிய தேவையற்ற பாகங்கள்
பிரம்மனுக்கு நான்கு மடங்கு அதிகம் !
அழிக்கும் தொழில் கொண்ட புதல்வன்
வேலனுக்கு ஆறு மடங்கு அதிகம் !

தன் தேகத்தையே !
சரியாக படைக்க தெரியாதவன்
தன் தவறை மறைக்க மறைந்து விட்டான் !
Free Web Counters
வந்தவர்கள்