Thursday, February 28, 2008

காதல் துளிகள் - 3

தேவதைகள் மாநாடு
என்று அறிவிப்பை கேட்டேன் !
எனக்கு சிரிப்பு தான் வந்தது
நீ மட்டும் தனியாக
அங்கு என்ன செய்ய போகிறாய்...?

********

கவிதை -
தபால்துறைக்கு அனுப்பப்படாத கடிதம் !
காதல் கவிதை -
எச்சில் தபால்தாள் ஒட்டப்படாமல்
வேறும் எச்சில் மட்டும் இருக்கும் கடிதம்

********

நீ என்னை
ஒவ்வொரு முறையும் கடக்கும் போதும்
என்னை தொலைக்கின்றேன்...
உன்னிடம்
கவிதை திருடுவதற்காக...

காதல் துளிகள் - 2

அவள் நெற்றியில்
இன்னொரு ட்ராபிக் சிக்னல்...
குங்குமம், சந்தனம், விபுதி...

******

246 தமிழ் எழுத்துக்கள் வாடியது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...!

*******

உன் பிறந்த நாள்
ஒன்றை தவிர
மற்ற 364 நாட்களும் ஏங்குதடி
வேறு எந்த தேவதையும்
மண்ணில் பிறக்காததால்.....

காதல் துளிகள் - 1

உன் தந்தை சோஸலிசம் பேசுகிறார்
கம்யூனிசம் நிறத்தில்
உன்னை வீட்டில் வைத்துக் கொண்டு!!

********

தமிழ் வாழ்க சொல்லும்
திராவிடன் நான் !
இந்தி வாழ்க சொல்கிறேன்
உந்தன் தாய்மொழி என்பதால்....!!

*********

உனக்கு தங்க நகை செய்ய
ஆசாரியிடம் பணம் கொடுத்தேன் !
தங்கம் சிரித்தது
தங்கத்திற்கே தங்க நகையா என்று....

Monday, February 25, 2008

காத்திருக்கிறோம்

இயற்கை நிலங்ளில்
இல்லங்களை கட்டிவிட்டு
மழைப் போழியுமா என்று காத்திருக்கிறோம் !

விவசாயம் செய்யும் இடங்களில்
வசியம் செய்யும் தொழிற்சாலைக் கட்டிவிட்டு
பசிக்கு உணவுக்காக காத்திருக்கிறோம் !

எத்தனையோ மதங்களை
இங்கு இறக்குமதி செய்துவிட்டு
இங்கு பிறந்த புத்தனை
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய பிறகு
மீண்டும் ஒரு புத்தன்
பிறக்க மாட்டாரா என்று காத்திருக்கிறோம் !

மேடைகள் தோறும் போய்கள் உரைத்துவிட்டு
வாய்மை வெல்லும் என்று காத்திருக்கிறோம் !

அறிவை அமெரிக்காவிற்கு விற்று
அன்னையை இந்தியாவிற்கு கொடுத்து
அயல் தேச டாலருக்காக காத்திருக்கிறோம் !

கனவில் அரண்மனையில் வாழ்ந்துவிட்டு
நிஜத்தில் மழைக்கு ஒதுங்க
இடத்திற்காக காத்திருக்கிறோம் !

விழிகளை காமத்திற்கு கொடுத்துவிட்டு
இதயத்திற்கு காதலுக்காக காத்திருக்கிறோம் !

செவிகளை மூடிக்கொண்டு
நல்ல செய்திகளுக்காக காத்திருக்கிறோம் !

நம்பிய மனிதனை ஏமாற்றிவிட்டு
நன்றி உள்ளவனை பார்ப்பதற்காக காத்திருக்கிறோம் !

காத்திருப்பவர்களுக்கு எல்லாம் நிரைவேரும்
உலகில் எட்டாவது அதிசயம் நிகழ்ந்தால்........ !!

நீ தான் நாளைய நாயகன்

ஆங்கிலத்தில் மொழிக் கற்றா
சேர மன்னன் இமய மலையில் கொடியை பறக்கவிட்டான் !

தமிழ் மொழி கற்றா
வெள்ளையன் வந்து நம்மை ஆட்சி செய்தான் !

அலுவலத்தின் வேலையில்
ஆங்கிலம் மட்டும் பேசும் தமிழா
மீதி நேரம் கூட தமிழை
பேச தயங்குவது ஏனடா ?

நாசாவில் பணியாற்றும் இந்தியர்களின்
முப்பது சதவீதம் தமிழர்களடா !

கணிபொறி யுகத்தை மாற்றும் இந்தியர்களின்
முப்பத்தி ஏழு சதவீதம் தமிழர்களடா !

வெளி நாட்டவர்க்கும் தொழிலில்
அதிகம் இலாபம் கொடுத்தது தமிழ்மண்ணடா !

எங்கு சென்றாலும் வெற்றி முரசுக்
கொட்டுவான் பச்சை தமிழன்
தமிழ் மொழியை போற்றி வளர்த்தால்
நீ தான் நாளைய நாயகன் !

வெள்ளித்திரையில் மட்டும் தெரிபவன்
கருவின் கதை நாயகன்
உலகளவில் தமிழை உயர செய்தால்
நீ தான் நாளைய நாயகன் !!
Free Web Counters
வந்தவர்கள்