Monday, December 15, 2008

தொலைப்பேசி தேவதை

கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். ஆனால், கடன் கொடுப்பாதற்காகவே நீ என்னை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டாய்.

" நாங்க XXX வங்கியில இருந்து பேசுறோம். உங்க சம்பள தகுந்த மாதிரி உங்களுக்கு Personal loan தரோம். உங்களுக்கு லோன் வேணுமா...?" - இரண்டே வரியில் முடிந்தது உன் குரல்... இல்லை உன் குறள்.

என்னை கடனாளியாக்குவதில் உனக்கு எத்தனை ஆசையோ ? இது போன்ற தொலைப்பேசிகளை துண்டிப்பவன் நான். ஆனால், உன் குரலை மீண்டும் கேட்பதற்காகவே மீண்டும் மீண்டும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி கேட்டேன். என்னை கடனாளியாக்கும் ஆர்வத்தில் நீயும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறாய்.

அப்துல் கலாமின் "தொலை நோக்குப் பார்வை 2020" படித்திருக்கிறேன். ஆனால் தொலைப்பேசி தொடர்புக் கொள்ளும் தேவதை உன் முகம் பார்க்க முடியவில்லை. தொலைப்பேசியில் தினமும் இது போன்ற தொல்லை கொடுப்பாயா ? என்ற கேட்க தோன்றியது.

பணத் தேவை இல்லாத போதும் உன் முகம் பார்ப்பதற்காகவே உங்கள் வங்கியின் சேவையை விரும்பினேன். இதற்காக தான் பெண்களை வைத்து தொலைப்பேசியில் அழைக்க சொல்கிறார்களோ ? அதன் பிறகு நீ கேட்ட கேள்விகள் எல்லாம் என் மனதிலே நிற்கிறது.

உங்களுக்கு எவ்வளவு சம்பளம் ? எங்க வேலை செய்றீங்க ? இதுக்கு முன்னாடி வேற எந்த பேங்க்ல லோன் வாங்கினிங்கலா ? உன் கேள்வி தனைகளை நீ தொடர்ந்துக் கொண்டே போனாய்.

நீ கேட்கும் கேள்விகள் எல்லாம் வங்கி கடன் கொடுப்பதற்காக கேட்பது போல் தெரியவில்லை. என் வாழ்க்கை துணையாக வருவதற்கு கேள்வி கேட்பது போல் இருந்தது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தொலைப்பேசியில் தொடர்ப்புக் கொள்வது. உன்னை பார்க்கும் ஆசை மனதில் துளிர் விட தொடங்கியது. உனக்காகவே உன் வங்கியில் கடன் வாங்க சம்மதித்தேன்.

என் அலுவலகத்திற்கு ஒருவன் வந்து உன் வங்கியில் இருந்து வருவதாக சொன்னான். உன் வங்கி மிகவும் மோசம். தொலைப்பேசியில் பெண்களை பேசவிட்டு நேரடி தொடர்புக்கு ஆண்களை நியமித்து இருக்கிறார்கள். வந்தவன் நீ தொலைப்பேசியில் சொன்ன உன் வங்கி விதி முறைகளை சொல்லிக் கொண்டு இருந்தான். உன் குரலின் நினைவில் நான் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தேன்.

மனமோ உன்னை பார்க்க புலம்பியது. என்னால் எனக்கே ஆருதல் சொல்ல முடியவில்லை. என்னை சந்திக்க வந்தவன் வங்கி முகவரி கொடுத்து சென்றான். உன் முகம் காண உன் வங்கி முகவரிக்கு வந்தேன். உன் பெயரை சொல்லி உன் இருப்பிடத்தை கேட்டேன். அதோ அங்கு இருப்பதாக ஒருவர் சொல்ல, சற்று அதரிந்தே உன்னை பார்த்தேன். கோயில் சிலையாக இருக்க வேண்டியவள் வங்கி ஊழியராக இருப்பாதா ? உனக்கும் சேர்த்து என் ஒருவன் வருமானம் பொதும். "வேலையை விட்டு வா" என்று செல்ல என் நாவு துடித்து. அறிமுகம் இல்லாதவனின் வார்த்தையை நீ எப்படி நம்புவாய். இதோ என்னை உனக்கு அறிமுகம் படுத்த என் கால்கள் உன்னை நெருங்க தொடங்கியது.

உன்னை நெருங்கியதும் என்ன பேசுவது என்று தெரியாமல்.... அங்கு இருக்கும் வங்கி ச்சலானை எடுத்து வந்துவிட்டேன். உன்னிடம் பேச மனதில் ஆசையிருக்கும் அளவிற்கு பேசும் வார்த்தைகளில்லை. நீ குரலில் குயில் என்றால், நிறத்தில் முயல் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிறமே என்னை பேசவிடாமல் செய்து விட்டது.

உன் வரவுக்காக உன் வங்கி வாசலில் காத்துக் கொண்டு இருந்தேன். உன் அழகில் அதிர்ந்தவனை இன்னொரு அதிர்ச்சி கொடுப்பாய் என்று நினைக்கவில்லை. என் அலுவலகத்திற்கு வந்து உன் வங்கியை பற்றி பேசியவனுடன் வந்துக் கொண்டு இருந்தாய். என் கண் முன்னே நீ அவன் வண்டியில் ஏறி சென்றாய். ஒரு நாள் உன் குரலை கேட்ட எனக்கே உன் மீது ஆசை வரும் போது தினமும் உன்னை பார்ப்பவனுக்கு ஆசை வராதா.....? அவன் எனக்கு முன்பே உன்னை பார்த்ததால் அவன் உன் காதலை வென்று விட்டான். நான் உன்னை பார்ப்பதில் பிந்திக் கொண்டதால்.... நீங்கள் போவதை பின்னாடி இருந்து பார்க்கிறேன்.

4 comments:

Bee'morgan said...

புதுமையான கதைக்களம்.. நன்று..

குகன் said...

நன்றி... Bee'morgan.

ஷாஜி said...

த்தோடா.. இந்த கதை கூட நல்லா கீது சாரே..

ARV Loshan said...

சுவை,சுவாரஸ்யம்.. கவரத் தக்க நடை.. ரசித்தேன்.. குகன் வாழ்த்துக்கள்

Free Web Counters
வந்தவர்கள்