Friday, July 25, 2008

காதல் மௌனம்

உன்னை மகிழ்விக்க
நான் நடனம் கற்றுக் கொண்டேன் !
உன் அழகை வர்ணிக்க
கவிதை எழுத கற்றுக் கொண்டேன் !

உன் அழகை வரைய
நான் ஒவியம் கற்றுக் கொண்டேன் !
உன் துன்பத்திற்கு ஆறுதலாக
நான் பாடக் கற்றுக் கொண்டேன் !

உன் கை வலிக்கும் என்று
நான் சமைக்கக் கற்றுக் கொண்டேன் !
ஆனால் உன்னிடம் காதல் சொல்ல
நான் எப்படி கற்றுக் கொள்ளப் போகிறேன் ?

நான்கு மொழிகள் கற்று அறிந்தவன் நான்
எந்த மொழிகளும் உதவவில்லை
உன்னிடத்தில் என் காதலை சொல்ல....

ஒவ்வொரு மொழிகளிலும் வார்த்தைகள் தேடுவதால்
என் மௌனம் மொழியாக மாறாவில்லை !

கணிப்பொறி வினாவுக்கு
விடை அளிப்பவன் நான்
என் காதலின் வினாவுக்கு
உன் விடை கேட்க உதடுகள் அஞ்சுகின்றன !

பார்த்தவுடம் காதல் சொல்லி
வாழ்ந்தவர்கள் மத்தியில்
கனவில் உன்னுடன் வாழ்ந்தும்
காதலை சொல்ல மன வரவில்லை !

கணிப்பொறியில் காதல் செய்யும் காலத்தில்
இன்னும் கவிதையில் காதல் செய்கிறேன்
இன்னும் என் மொழிக்கு வார்த்தைகள் கிடைக்காததால்...!

No comments:

Free Web Counters
வந்தவர்கள்