Tuesday, July 08, 2008

நினைவில் நின்ற நண்பர்களுக்கு...

(என் கையெழுத்து (ஆட்டோகிராப்) புத்தகத்தில் முன் பக்க கவிதை)

நாம் எதிர்பார்க்கவில்லை
சந்திப்போம் என்று !
நாம் எதிர்பார்க்கிறோம்
பிரியப்போகிறோம் என்று !
நான் எதிர்பார்க்கிறேன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று !

தலைமுடி நரைத்தப் பிறகு
தலைமுறை ஒன்று கடந்த பிறகு
என்றோ ஒரு நாள் சந்தித்தால்...

நன்றாய் பழகினோம் என்று
நாம் பேசிய வார்த்தைகள்
நினைவில் இருந்தால்...
அன்று கூறுவோம் நம் நட்பு கடல் என்று

நம் நினைவுகளை
நெஞ்சில் பதித்துவிட்டேன்
என் கையெப்பப் புத்தகத்தில்
கையெழுத்து இடுங்கள் !

எங்கள் முகங்களை
நினைவில் நிருத்திக் கொண்டேன்
இருப்பினும் உங்கள்
புகைப்படங்கள் தாருங்கள் !

காலம் நினைத்தால்
மீண்டும் சந்திப்போம்
சரித்திரம் படைத்தவர்களாக !
நீங்கள் சரித்திரம் படைக்க
என் வாழ்த்துக்கள் !!

1 comment:

Aruna said...

நல்லா இருக்கு!!
அன்புடன் அருணா

Free Web Counters
வந்தவர்கள்