Friday, July 18, 2008

மகாத்மாவுக்காக அழுகின்றேன்

நூறு வயது கடந்த
மகாத்மா உன்னை அழைக்கிறேன்
என் சோகத்தை உன்னிடம் கூற...!

வெள்ளையரை விரட்டிய
நூறு வயது இளைஞனே !
உன் மண்ணில் பிறந்த இளைஞர்கள்
மத வெறி மிருகங்களாக மாறிவிட்டார்கள்
அவர்களுக்காக நான் அழுகின்றேன் !

அன்று !
ஆப்பிரிக்கா இரயில் பெட்டியில்
வெளியே தள்ளப்பட்ட இளைஞன்
துடித்து எழுந்தான்
புரட்சி பிறந்தது !

இன்று !
மதத்திற்காக
ஒர் இளைஞன் துடித்து எழுந்தான்
குஜராத்தில்
புதிய ( இரத்த) ஆறு பிறந்தது !

மகாத்மா !
உனக்காக நான் அழுகின்றேன் !
நீ சிந்திய இரத்ததில்
சுதந்திரம் கண்டோம் !
பலர் இரத்தம் சிந்திக் கொடுத்த
குஜராத் பூகம்ப நிவாரணநிதி
குஜராத் மதக்கலவரத்தால்
மீண்டும் இரத்தமாக மாறிவிட்டது !
அங்கு சிந்தும் இரத்த வாடை
தமிழகத்தில் வீசுகிறது !
மீண்டும் உன் மண்ணில் பிறந்து
உன் மக்களிடம் இருந்து
உன் மண்ணைக் காப்பாற்று !

மகாத்மா அழுதார்
மீண்டும் அந்த மண்ணில் பிறப்பதற்கு !
மகாத்மா தன் சோகத்தை முறையிட
அயோத்தி ராமனிடம் சென்றார்
அவரிடம் கூற மறந்து விட்டேன்
இன்று டிசம்பர் ஆறு என்று !
அயோத்தி ராமனோ !
தலைமறைவாகி விட்டான் !
அங்கு பார்த்த கலவரத்தில்
மகாத்மா மீண்டும்
விண்ணுலகம் பறந்தார் !
இறுதியாக அவர் கூறிய வார்த்தை
" ஹே ! ராம்
உனக்குக் கூட என் நிலைதானா ! "

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் இருந்து முதல் கவிதை (2003)

No comments:

Free Web Counters
வந்தவர்கள்