Tuesday, July 08, 2008

என் உயிர் தோழிக்கு...

கோயிலுக்குச் செல்லும் போது
என் காலணியை மட்டும் அல்ல......
என் தீய எண்ணங்களையும்
வெளியே விட்டே செல்கிறேன் !

உன்னிடம் பேசும் போது
காதலை மட்டுமல்ல......
காமத்தையும் மறந்தே
உன்னிடம் பேசுகிறேன் !

கோயிலுக்குள் தீய
எண்ணங்களுக்கு இடமில்லை !
ஆண் பெண் நட்புக்குள்
காமம் வருவதில்லை...!!

பேருந்து நிலைவரை
நம் நடைப் பயணத்தில்
"கடலை" என்று கூறும்
தூரத்து நண்பர்களின்
கேலிப் பேச்சுக்களும்.......

நம் நட்பை “காதல்” என்று
அரிதாரம் பூசும்
நம் வகுப்பு நண்பர்ளும்...

இவர்கள் பேச்சில்
மனமுடையும் போது
“அவர்கள் பேச்சை விட்டு தள்ளுடா” -
என்ற உன் வார்த்தைகளும்.

புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தேன்.......
என் சக வயதில்
இன்னோரு அன்னையை !

நீ எனக்கு பெண்ணல்ல
என் ஆண் நண்பர்களில் ஒருவன் !
நான் உனக்கு ஆண்ணல்ல
உன் பெண் தோழிகளின் ஒருத்தி !

ஒளவை அதியமான் நட்பு
ஆண் பெண் நட்பு உதாரணமா...!
நம் நட்புமட்டும்
இவர்களுக்கு ஏளனமா... !!

அன்றைய நட்பை
நாம் உதாரணம் காட்டினோம் !
நம் நட்புபை
நாளையத் தலைமுறை
உதாரணம் காட்டட்டும் !!

2 comments:

sankar said...

hello i see u r blog very nice& good kavithai,see my blog tcln.blogspot.com click ads only

Aruna said...

//அன்றைய நட்பை
நாம் உதாரணம் காட்டினோம் !
நம் நட்பை
நாளையத் தலைமுறை
உதாரணம் காட்டட்டும் !!//

நல்ல நட்பு....அருமையான கவிதை..
அன்புடன் அருணா

Free Web Counters
வந்தவர்கள்