Thursday, July 17, 2008

முடிவடையாத கவிதை (கலவரம்)

டிசம்பர் ஆறு அன்று
தொலைந்த போன
அல்லா ! ராமா !
அயோத்தி மக்களைக் காப்பாற்ற
உங்கள் இடத்தை நிரப்ப
வேறொரு இறைவனைத் தேடுகிறேன் !

முதலில் ஏசுவை அழைத்தேன்
"சிலுவையில் அறைந்து
நான் பட்ட துன்பம் போதும் " - என்றார் !

புத்தரை அழைத்தேன்
மூடிய கண்களை திறக்காமல்
மௌனம் சாதித்தார் !

பிள்ளையாரை அழைத்தேன்
"தன் மூஞ்சுறுக்கு
நூறு பூனைப்படை காவலுக்கு" கேட்டார் !

முருகனை அழைத்தேன்
" தனக்கு ஆறுபடை வீடு போதும்" என்றார் !

சிவனை அழைத்தேன்
"தன் அழிக்கும் தொழிலை
தனக்கு பதிலாக மனிதர்கள் தொடர்கிறார்கள்" - என்றார் !

இறைவனிடம் உரையாடும் போது
குஜராத்தில் மீண்டும் கலவரமாம்
அங்கு எந்த இறைவனை அழைப்பது ?

அயோத்தி இடத்தை நிரப்பும் முயற்சியில்
என் கவிதையின் பக்கங்கள் மட்டுமே நிரம்பியது !
கலவரங்கள் முடியும் வரை
இந்த முடிவடையாத கவிதையின்
பக்கங்கள் நிரப்பப்படும் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 16வது கவிதை.

2 comments:

Unknown said...

அன்பும் பாசமும் என்றும் தழைக்கும், நாளையும் தழைக்கும்,
நிரந்தரமாக தழைத்து நிற்கும்.

Unknown said...
This comment has been removed by the author.
Free Web Counters
வந்தவர்கள்