Thursday, August 07, 2008

இப்படிக்கு காதல்...

அன்புள்ள இறைவனுக்கு,
உன்னால் படைக்கப்பட்ட காதல் எழுவது,
நான் இறக்கும் தருவாயில்
என் உயிரைக் காக்க விண்ணப்பக் கடிதம் !

அன்று -
தாஜ்மஹால் கட்டும் அளவிற்கு
காதல் புனித மானது !
இன்று -
மூன்று பெண்களைக் காதலிக்கும்
அளவிற்கு காதல் மொழுது போக்கானது !

அன்று -
காதலுக்காக உயிரையே கொடுத்தார்கள்
இன்று -
காதலியின் வயிற்றில் உயிரைக் கொடுக்கிறார்கள்.

அன்று -
மணந்தால் மகாதேவி
இல்லை என்றால் மரண தேவி !
இன்று -
கிடைத்தால் பத்மினி
இல்லை என்றால் ரோகினி !

அன்று - காதல் தெய்வீகமானது !
இன்று - காதல் சுயநலமானது !

இறைவா !
என் பெருமையை உணர்ந்த
அம்பிகாபதி அமரவாதியைப் படைத்துவிடு !
ஷாஜகானுக்கு உயிர் கொடுத்து
இன்னொரு தாஜ்மஹால் கட்ட உத்தரவிடு !
லைலா, மஜ்னுக்கு உயிர் கொடுத்து
காதலின் பெருமையை உணர்த்திவிடு !

காதலை புனிதப்படுத்தும்
ஷேக்ஸ்பியர் போன்ற எழுத்தாளர்களை
தரணியில் வாழவிடு !

இவர்கள் இறந்து என்னை பெருமை படுத்தினர் !
பலர் வாழ்ந்து என்னை காயம் படுத்துகிறார்கள் !

இன்னும் சில காதலர்களை கொடுத்து
என் சரித்திரப்பக்கங்கள் நிரப்ப வேண்டும்
இந்த நூற்றாண்டில்
நான் புனிதமாய் நடைபோட வேண்டும் !

- இப்படிக்கு,
காதல்.


- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் இருந்து 24வது கவிதை (2003)

No comments:

Free Web Counters
வந்தவர்கள்