Monday, August 25, 2008

எய்ட்ஸ் குழந்தை

என்றோ விடலை பருவத்தில்
தந்தை தவறு செய்தான் !
ஒன்றும் அறியாத தாயோ
அந்த தவறுக்கு இணங்கினாள் !
உடல் எடை கூடும் முன்
எய்ட்ஸ் நோயுடன் பிறந்து விட்டாய் !!

மொழிகள் வார்த்தை அறியும் முன்
எய்ட்ஸ் நோயால் புறக்கணிக்கப்பட்டாய் !
பால் குடிக்கும் பருவத்தில்
பால்விணை நோயால் அவதிப்பட்டாய் !
மண்ணில் வாழ்த் தொடங்கும் முன்
மரணத்தின் வாசல் தட்டத் தொடங்கிவிட்டாய் !!

அர்த்தமற்ற பிறப்பில்
முடிவைத் தேடி செல்கிறாய் !
ஓடி விளையாட முயலும் முன்
வாழ்வின் நாட்களை எண்ணுகிறாய் !

பெற்றோரின் பாவம் பிள்ளைக்கு
என்று இறைவன் வகுத்த நீதியாம் !
"தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க
அவர்கள் பிள்ளைகளுக்கும் அதே தண்டனை"
பால்வினை நோயின் நீதியாம் !

சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது
எய்ட்ஸ் நோயின் முடிவு மரணம் என்று !
எங்கோ கேட்டேன்
மனிதனின் முடிவும் மரணம் என்று !
யாரும் கூறவில்லை
மண்ணில் பிறந்தவுடன்
மனிதர்களால் மரண தேதி
குறிக்கப்பட்டவர்கள் 'இவர்கள்' என்று .....!!

- நான் எழுதிய் "உறங்காத உணர்வுகள்" நூலில் 17வது கவிதை

1 comment:

anbagam- a home for hiv affected children said...

hai.....
really super .this is a home for hiv +ve orphan kidz in dindigul...

who is responsible for their future ???

if u find any orphan child pplease join to this home...
www.anbagamdindigul.blogspot.com
Mr.thangachan(+91-94427 49959)

Free Web Counters
வந்தவர்கள்