Thursday, August 21, 2008

கவிதையின் எதிரி

‘கவிதை’
என்பது பொய்யாம்
ஆதலால், கவிதைக்கு
உண்மை தான் எதிரி !

பொய்யெல்லாம்
உண்மையாகிவிட்டால் !
எழுதிய மையெல்லாம்
உண்மையாகிவிடும் !

காற்றோடு செல்லும் உடல்
கவிதை பாடும் குயில் !
மதுவின் மயக்கம்
மாதுவின் ஸ்பரிசம் !!

மரணத்தின் நடுக்கம்
மரணப்படுக்கை உறக்கம் !
பள்ளியில் வந்த முதல் சினேகிதம்
கல்லூரிக் காதல் கொடுத்த இன்பம் !!

முதல் முத்தம்.....
முல்லை தரும் சுகந்தம் !
தோழியுடன் நடைப்பயணம்
தோழர்களுடன் பேரூந்துப் பயணம் !!

மூன்றாம் பிறையாக
சித்தரிக்க படும் சூரியன் !
முத்திரை பொழுதில்
முழு நிலவாய் சந்திரன் !!

அழிகில்லாப் பதுமையை
அவதாரம் என்று அழைப்பது !
அவளின் கோழிக் கிறுக்கல்களை
கவிதை என்று வர்ணிப்பது !!

மரணத்தின் பின் வாழ வைப்பது
பிறக்கும் முன்பே உருவத்தை வடிவமைப்பது !

எல்லாம் சாத்தியம் கவிதையில்...
ஆனால்,
இந்த உண்மை
எட்டவில்லை சில பேர் மனதில் !

கற்பனைகள்
கவிதைக்குத் தீனிப்போடும் !
ஏதார்தங்கள்
எதிர்மறையாக சண்டைப்போடும் !

உண்மை கவிதைக்கு
தடை விதிக்கவில்லை !
உண்மையை உணர்ந்தவர்கள்
கவிதைப் பொய் என்றே கூறுகிறார்கள் !

கனவுகளே கவிதைக்கு விதையானது
கற்பனையே கவிதையின் எழுத்தானது !
விற்பனை ஆகும் போது காசானது
உண்மையே கவிதைக்கு எதிரியானது !!

No comments:

Free Web Counters
வந்தவர்கள்