Thursday, November 06, 2008

ஓவியனின் ஓவியம்

உன்னை வரைய
நிலவுக்கு சென்றேன்
நிலவு உன் முகம் போல் தெரிந்ததால்
அங்கு வரைய மனமில்லை !
சற்று உயரமாகப் பறந்து
நட்சத்திரத்திடம் சென்றேன்
அது உன் பற்கள் போல் இருந்ததால்
அங்கு வரைய இடமில்லை !

பகலில் சூரியனில்
வரைய சென்ற போது
உன் கண்களில் வரும் ஒளியை காட்டி
என் கண்கள் கூச செய்தது !

இறுதியாக உன்னை வரைய
மேகத்திடம் சென்ற போது
உன் தேகம் போல் இருந்ததால்
அங்கு வரைய கைகள் நடுங்கியது !

நான் உன்னை வரைய
இயற்கையிடம் இடம் கேட்டேன்
இயற்கை தன்னை வரைந்த
இறைவனிடம் கேட்க சொன்னது !

சற்று யோசித்ததில் புரிந்து கொண்டேன்
இறைவன் உன்னை போல்
இயற்கையை படைத்து விட்டான் !

உன்னை வரைய துடித்த ஓவியன் - நான்
உன்னை வரைந்து முடித்த ஓவியன் - இறைவன்
அதனால்,
என்னை விட சிறந்த ஓவியன்
இறைவன் ஆகிவிட்டான் !

அவன் படைத்ததில்
சற்று தவறு செய்துவிட்டான்
அவனுக்கு போட்டியாக
என்னையும் வரைந்து விட்டான் !

என்னை விட சிறந்த ஓவியன்
- இறைவன் !
அவனை விட பாக்யசாலி
- நான் !

No comments:

Free Web Counters
வந்தவர்கள்