Wednesday, September 17, 2008

முதியோர் இல்லம்

ருசி பார்க்க பற்களில்லை
தோள் கொடுக்க தோழன் இல்லை
ஆதரவாய் பேச பிள்ளைகளும் இல்லை
முதியோர்களுக்குக் கிடைத்தது
முதியோர் இல்லம் என்னும்
திறந்த வேலி சிறைவாசம் !

ஆயுள் முடியும் காலத்தில்
ஆயுள் முடியும் வரை
இங்கு உள்ளவருக்கு விடுதலையில்லை !

பிள்ளைகளின் குடை
நிழல் கொடுக்க மறுக்க
திறந்த இடத்தில்
நிழலை தேடுகிறார்கள் !

தவளமும் வயதில்
நடைபயில கைகள் தேடினான் !
பத்து வயதில்
விளையாட நண்பர்கள் தேடினான் !
வாலிப பருவத்தில்
கன்னி மனதில் இடம் தேடினான் !

தந்தையானதும் பிள்ளைக்கு
பள்ளியில் இடம் தேடினான் !
வேலை ஓய்வுக்கு முன்பு
தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடினான் !

இறுதிவரை முதியோர் இல்லத்தில் இருக்கும்
அவன் பெற்றோரைத் தேடவில்லை !
ஆனால்,
அவன் இறுதி மூச்சு பிரிந்தது
முதியோர் இல்லத்தில் தான் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 11வது கவிதை

3 comments:

துளசி கோபால் said...

மூதியோர்?


முதியோர் என்று இருக்க வேணாமா?

RATHNESH said...

//மூதியோர்?


முதியோர் என்று இருக்க வேணாமா?//

அதானே, நாகர்கோவில் பக்கம் "மூதி" என்றால் அர்த்தமே வேறு.

குகன் said...

// முதியோர் என்று இருக்க வேணாமா?//

மாற்றிவிட்டேன். என் பிழையை சொன்னதற்கு நன்றி.

Free Web Counters
வந்தவர்கள்