Monday, September 22, 2008

கண்ணீர்

கண்ணீரில் வாழும் மனிதனே !
உன் கண்ணீரால்
கடல் நீர் உப்பாகி விட்டது !

பிறக்கும் போது
ஏன் பிறந்தோம் என்று கண்ணீர் !
ஐந்து வயதில்
ஒரு பொம்மைக்காக கண்ணீர் !

பத்து வயதில்
படிப்பதற்காக கண்ணீர் !
பதினைந்து வயதில்
மதிப்பெண்ணுக்காக கண்ணீர் !

இருபது வயதில்
பெண்ணின் காதலுக்காக கண்ணீர் !
இருபத்தைந்து வயதில்
வேலைக்காகக் கண்ணீர் !

முப்பது வயதில்
திருமணத்திற்காக கண்ணீர் !
முப்பத்தியைந்து வயதில்
திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணீர் !

நாற்பது வயதில்
பிள்ளை பெறுவதற்காகக் கண்ணீர் !
நாற்பத்தைந்து வயதில்
பணத்துக்காகக் கண்ணீர் !

ஐம்பது வயதில்
பிள்ளைகள் எதிர்காலத்துக்காகக் கண்ணீர் !
ஐம்பத்தைந்து வயதில்
பிள்ளை திருமணத்துக்காக கண்ணீர் !

அறுபது வயதில்
முதியோர் இல்லத்தில் கண்ணீர் !
அறுபத்தைந்து வயதில்
மரணத்தைக் கண்டு கண்ணீர் !

உன் கண்ணீரால்
கடல் நீர் உப்பாகி விட்டது !
இறைவா !
எனக்கு இன்னொரு உலகம் கொடு !
அங்கு சிரிக்கும்
மனிதர்களை மட்டும் கொடு !
சர்க்கரை போல் இனிக்கும்
கடலைக் கொடு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 10வது கவிதை

No comments:

Free Web Counters
வந்தவர்கள்