Friday, October 31, 2008

அழகு

கவிதை பாடும் கவிஞனுக்கு
பார்க்கும் இயற்கை எல்லாம் அழகு !
தமிழ் கற்ற புலவனுக்கு
தமிழ் வார்த்தை ஒவ்வொன்றும் அழகு !
பசி வந்த மனிதனுக்கு
பார்க்கும் உணவெல்லாம் அழகு !
இதயம் தேடும் இளைஞனுக்கு
கன்னியரின் காதல் அழகு !

கோடி நட்சத்திரங்களின் நடுவில்
நிலவு ஒன்று தான் அழகு !
மொழிகளின் வார்த்தைகள் தெரியாமல்
மழலை பேசும் மொழி அழகு !
ஆடவரை மயக்கும் வேல்விழி இருந்தும்
கன்னிக்கு மை இடுவது அழகு !
பொன் நகையால் அலங்கரிக்கப்பட்டாலும்
பெண்ணுக்குப் புன்னகை அழகு !

உழைக்கத் தெரிந்த மனிதனுக்கு
வெற்றி பெறுவதே அழகு !
பத்து மாதம் கருவில் பிறந்த
குழந்தையின் கண்ணுறக்கம் அழகு !
அழகான பொருளை எல்லாம்
ரசிக்கும் நாட்கள் அழகு !
அழகை ரசிக்கும் போது மரணம் வந்தால்
அந்த மரணம் கூட அழகு !

அழகில்லை என்று
காதலைச் சொல்லாமல்
கண்ணீர் சிந்தும் நண்பா !
உன் கண்ணீர் துளியும் அழகு !
இந்த கண்ணீரை அவள் துடைத்தாள்
அந்த அழகி உனக்கு மட்டுமே அழகு !
காதலிக்காகக் காத்திருக்கும்
அழகான நாட்கள் அழகு !

நண்பா !
காத்திருப்பது
உண்மை காதலுக்கு அழகு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 14வது கவிதை

No comments:

Free Web Counters
வந்தவர்கள்