Thursday, October 02, 2008

என் செல்லரித்த கவிதைகள்

என் பழைய புத்தங்களை
தூசு தட்டிக் கொண்டுருந்தேன்
திடீர் விருந்தாளிப் போல் கிடைத்தது
செல்லரித்துப் போன
என்னுடைய கிறுக்கல்கள்
இல்லை...
என்னுடைய கவிதைகள் !

என் வயதான கவிதைக்கு
நானே ரசிகனானேன்
வயதான கிழவி
பதினாறு வயது பருவ பெண்ணாக
என் கண்ணுக்குத் தெரிந்தாள் !

என் காலசக்கரத்தை
ஒரு முறை ஓட்டிப்பார்த்தேன்...
வகுப்பறையில் கவிதை எழுதிய
நாட்களை நினைத்துப் பார்க்க..!

சில கவிதைகள்
என் நண்பர்களின் காதலுக்கு
உதவுவதற்காக எழுதியது !
இன்னும் சில கவிதைகள்
பக்குவமில்லாத
என் காதலைப் பற்றி எழுதியது !
ஒரு சில கவிதைகள்
என் தோழிகளை பொய்யாக
வர்ணித்து எழுதியது !
மூன்று கவிதைகள்
எனக்கு பரிசு
வாங்கி கொடுத்தது !

என் கவிதையின் பிழையை திருத்திய
தமிழ் ஐயா நினைவுக்கு வந்தார் !
என் கவிதையை ரசிக்கும்
தோழிகள் மின்னலாய் வந்தனர் !
காதலிக்கு கவிதை கேட்ட
நண்பர்கள் அலையாய் சென்றனர் !

பல முறை நினைத்துப் பார்த்தும்
வாழ்ந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தது !
மீண்டும் அந்த நாட்கள் சென்று
வாழ முடியவில்லை !

தூசு தட்டி விட்டு
பழைய புத்தகங்களை
இருக்கும் இடத்தில் வைத்துவிட்டேன்
மீண்டும் செல்லரித்துப் போவதற்கு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 18வது கவிதை

2 comments:

Aruna said...

அப்படியே என் உணர்வுகளைப் ப்ரதிபலிக்கும் கவிதை...இது போல அடிக்கடி நேர்ந்திருக்கிறது...
அன்புடன் அருணா

குகன் said...

நன்றி அருணா...

Free Web Counters
வந்தவர்கள்