Tuesday, April 08, 2008

இயற்கை தேவதை

இயற்கைக்கு பிறகு பச்சை நிற ஆடையில் நீ மட்டும் தான் தேவதையாய் தெரிந்தாய். இயற்கைக்கு சற்று போட்டியாய் உன்னை படைத்து விட்டானோ இறைவன் என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு பச்சை நிற ஆடையில் இன்னொரு இயற்கை அன்னையாய் தெரிந்தாய் நீ.....

"எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் !" என்று நீ சொல்லி இனிப்பை நீட்டினாய்.

நானும் பல முறை சுவைத்துப் பார்த்தேன். எனக்கு மட்டும் இந்த இனிப்பு தெவிட்டவில்லை. காரணம் உன்னிடம் கேட்டதற்கு "நீ சுவைத்தது இனிப்பை யல்ல...என் இதழ்கள்" என்றாய்.
இந்த இனிப்பை எந்த கடையிலும் விற்பதில்லை. ஒரு விதத்தில் நல்லது தான். இந்த இனிப்பு நான் மட்டும் சொந்தக்காரன் என்ற கர்வம் வந்தது.

"முத்தம் கொடுத்தது போதும்... நான் கொண்டு வந்த இனிப்பையும் சுவைத்த பார் !" என்றாய்.

உன் இதழ்களை விட்டு உன் கன்னத்தை சுவைக்க தொடங்கியது என் இதழ்கள். எத்தனை முறை முத்தம் கொடுப்பாய் உனக்கு அலுப்பு தட்ட வில்லையா என்று போய்யான கோபத்தில் கேட்டாய். எத்தனை முறை அலைகள் கரைக்கு வந்து கொண்டு இருக்கிறது. என்றாவது கரை அலைகளை பார்த்து இப்படி கேட்டுயிருக்குமா ?

"உனக்கு முத்தம் கொடுத்து அலுப்பு தட்டவில்லை..... உன்னிடம் ஒரு முறை எல்லை மிரலாமா என்று மனது துடிக்கிறது" என்றேன்.
"அடபாவி...கன்னத்தில் அரை வாங்குவாய்" என்றாய். அறையில் பள்ளிக் கொள்ள வா என்று அழைத்ததற்கு அடி விழும் என்றாய். அ து கூட எனக்கு சுகம் தானடி நீ என்னை தீண்டுவதால்......

"உன் பிறந்த நாளுக்கு ஒரு கவிதை சொல்லட்டுமா." என்றேன்.

"சரி....சொல்" என்றாய் வெட்கத்துடன்.

உன் பிறந்த நாள்
ஒன்றை தவிர
மற்ற 364 நாட்களும் ஏங்குதடி
வேறு எந்த தேவதையும்
மண்ணில் பிறக்காததால்.....

ஆசையில் கட்டியனைத்து முத்தம் கொடுத்தாய்.... இவ்வளவு நேரம் நான் உனக்கு கொடுத்த முத்தங்களை எல்லாம் தொற்கடித்தது போல் உன் முத்தம்.... என் கன்னத்தில் விழுந்தது. பொறாமையில் மற்ற அங்கங்கள் வாடியது......!

நான் கொடுத்த நூறு முத்தங்களும் உன் ஒரு முத்தத்தில் தோல்வியை தழுவியது. நல்ல வேலை வெட்கம் பெண்களுக்கு ஆடையாகாவிட்டால் என்னை பொன்ற ஆண்களின் நிலைமை என்னவாகும்.

நீ வெட்கத்தில் கொடுத்த ஒரு முத்தத்திற்கே இவ்வளவு சக்தி என்றால்..... நீ உன் வெட்கத்தின் எல்லையை மீறினால் நான் என்ன ஆவேன்.... பயம் களந்த ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்..... நாம் எல்லை மீறும் மண நாள் என்று வருமோ.....?

No comments:

Free Web Counters
வந்தவர்கள்