Monday, February 25, 2008

காத்திருக்கிறோம்

இயற்கை நிலங்ளில்
இல்லங்களை கட்டிவிட்டு
மழைப் போழியுமா என்று காத்திருக்கிறோம் !

விவசாயம் செய்யும் இடங்களில்
வசியம் செய்யும் தொழிற்சாலைக் கட்டிவிட்டு
பசிக்கு உணவுக்காக காத்திருக்கிறோம் !

எத்தனையோ மதங்களை
இங்கு இறக்குமதி செய்துவிட்டு
இங்கு பிறந்த புத்தனை
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய பிறகு
மீண்டும் ஒரு புத்தன்
பிறக்க மாட்டாரா என்று காத்திருக்கிறோம் !

மேடைகள் தோறும் போய்கள் உரைத்துவிட்டு
வாய்மை வெல்லும் என்று காத்திருக்கிறோம் !

அறிவை அமெரிக்காவிற்கு விற்று
அன்னையை இந்தியாவிற்கு கொடுத்து
அயல் தேச டாலருக்காக காத்திருக்கிறோம் !

கனவில் அரண்மனையில் வாழ்ந்துவிட்டு
நிஜத்தில் மழைக்கு ஒதுங்க
இடத்திற்காக காத்திருக்கிறோம் !

விழிகளை காமத்திற்கு கொடுத்துவிட்டு
இதயத்திற்கு காதலுக்காக காத்திருக்கிறோம் !

செவிகளை மூடிக்கொண்டு
நல்ல செய்திகளுக்காக காத்திருக்கிறோம் !

நம்பிய மனிதனை ஏமாற்றிவிட்டு
நன்றி உள்ளவனை பார்ப்பதற்காக காத்திருக்கிறோம் !

காத்திருப்பவர்களுக்கு எல்லாம் நிரைவேரும்
உலகில் எட்டாவது அதிசயம் நிகழ்ந்தால்........ !!

No comments:

Free Web Counters
வந்தவர்கள்