Thursday, February 28, 2008

காதல் துளிகள் - 3

தேவதைகள் மாநாடு
என்று அறிவிப்பை கேட்டேன் !
எனக்கு சிரிப்பு தான் வந்தது
நீ மட்டும் தனியாக
அங்கு என்ன செய்ய போகிறாய்...?

********

கவிதை -
தபால்துறைக்கு அனுப்பப்படாத கடிதம் !
காதல் கவிதை -
எச்சில் தபால்தாள் ஒட்டப்படாமல்
வேறும் எச்சில் மட்டும் இருக்கும் கடிதம்

********

நீ என்னை
ஒவ்வொரு முறையும் கடக்கும் போதும்
என்னை தொலைக்கின்றேன்...
உன்னிடம்
கவிதை திருடுவதற்காக...

No comments:

Free Web Counters
வந்தவர்கள்